|
சுதந்திர உணர்வு கொண்ட பிறர் உங்களை கட்டுப்படுத்துவதை விரும்பாத
தனுசுராசி அன்பர்களே. எந்தவிடையத்திலும் நிதானமாகத் திட்டமிட்டு
இறங்குகின்றீர்கள். அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு இறுதியில்
வெற்றியும் காண்கின்றீர்கள். எதிரிகள் குறை கூறிப் பேசுவதை தவறு
இழைப்பதையும் ஒரு கட்டம் வரை பொறுக்கின்ற நீங்கள் பின்னர் பொங்கி
எழுந்து தாக்குகின்றீர்கள். எதிர்காலத்தில் அதிகமான நம்பிக்கை கொண்ட
நீங்கள் எச்சந்தர்ப்பத்திலும் மனம் தளர்ந்து விடாது அதற்காக
உளைக்கின்றவர்களாக இருக்கின்றீர்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விடையத்தில் அக்கறை இல்லாதவர் போல் செயற்படும்
நீங்கள் திடீரென அந்த விடையத்தில் தீவிர ஆர்வத்துடன் ஈடுபடுகின்றீர்கள்.
இது உங்களைப் புரிந்து கொள்வதில் உங்கள் நன்பாகளுக்கு சிக்கலானதாக
இருக்கின்றது. கூடியவரை பிறர் விவகாரங்களில் ஈடுபட மாட்டீர்கள்.
எல்லோரையும் ஒன்றென எண்ணி நடாத்துவீர்கள். பாரபட்சம் காட்டமாட்டீர்கள்.
சிறந்த நினைவாற்றல் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். எல்லாமே இயல்பாகவும்
விரைவாகவும் நடக்க வேண்டும் என கருதுகின்றீர்கள். வாழ்க்கையினை அதன்
வழியிலேயே சந்திப்பதற்கு விரும்புபவராக இருப்பீர்கள். இதிலும் மார்கழி
1 முதல் 11 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்கள் மற்றவர்களைக்காட்டிலும்
மெதுவாகப்பேசுகின்றவர்களாக இருப்பார்கள்.
சற்று
துணிச்சல் மிக்கவர்கள். அடிக்கடி புதிய புதிய இடங்களுக்கு மாறுவதில்
அலாதி பிரியம் இருக்கும். மார்கழி 12 முதல் 21 வரையான காலப்பகுதியில்
பிறந்தவர்கள் மேற்குறிப்பிட்ட குணாதிசையங்ளோடு சிறப்பாக இவற்றையும்
கொண்டிருப்பர். எதிலும் மிகுந்த கவனத்துடன் செயற்படுவீர்கள். பல
செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். எந்தப்பிரச்சினையும்
அதிக நாள் உங்களை வாட்டுவதில்லை.
@
இணைப்பு இதயநிலா அன்பன்... |