|
வாழ்க்கையில்
சிரமங்கள் தாண்டியும் உழைத்துக்கொண்டிருக்கும் மகரராசி அன்பர்களே.
எதற்கும் அவசரப்படாது நிதானமாகச்சிந்தித்து செயலாற்றும் நீங்கள்
பணத்தினை செலவிடுவதில் மிகவும் கடடுப்பாட்டுடன் இருக்கின்றீர்கள். பழைய
பொருட்களை சேமித்து வைப்பதில் உங்களுக்கு ஒரு தனி ஈடுபாடு இருக்கும்.
மற்றவர்கள் நம்மீது கவன் செலுத்த வேண்டும் என மிகுந்த எதிர்பார்ப்புடன்
இருக்கின்ற நீங்கள்.
அதற்கு
ஏற்றால்ப்போல் வாழ்வது கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
கடுமையாக உழைப்பதற்கு தயாரகவே இருக்கின்றீர்கள். உங்களிலும் சிறப்பாக
மார்கழி 22 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள்
மேற்குறிப்பிட்ட குணாதிசையங்களுடன் பின்வரும் குணாம்சங்களையும்
கொண்டிருப்பீர்கள். மகர இராசிக்காரர்களிலேயே இனிமையான பேச்சு வல்லமை
கொண்டவர்கள் நீங்கள். மற்றவர்களுடன் சுமூகமாகப் பழகக்கூடியவர்கள்.
பொதுவாக அமைதியான இடத்திலேயே வாழ விரும்பும் நீங்கள். அளவுக்கு மீறி
எதிலும் ஆசைப்பட மாட்டீர்கள். வசதிபடைத்தவர்களைக் கண்டு எப்பொழுதும்
பொறாமை கொள்ள மாட்டீர்கள். மார்கழி 31 முதல் தை 10 வரையான
காலப்பகுதியில் பிறந்தவர்கள்.
நீங்கள் உங்களுடைய காரியம் நிறைவேறும் வரைக்கும் இனிமையுடனும்
பரிவுடனும் நடந்து கொள்ளும் நீங்கள் உங்கள் காரியம் முடிவடைந்ததும்
எதற்கும் வளைந்து கொடுக்காமல் கடுப்பானவர்களாக மாறிவிடுகின்றீர்கள்.
பிறர் சொல்வது எதையும் விரும்பாத நீங்கள் அதிகமாக கோபமடைகின்றீர்கள்
ஆனால் உங்கள் கோபம் வாய்ச்சண்டையுடன் முடிந்து போய்விடுகின்றது. இதிலும்
தை 11 முதல் 19 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்கள் சற்று பயந்த சுபாவம்
உடையவர்களாகவும். குறுக்கு வழியை விரும்பாதவர்களாகவும் இருப்பீர்கள்.
@
இணைப்பு இதயநிலா அன்பன்... |