|
இருவருமே
மரணம் கண்டான். ..
வெட்ட வெளி மரநிளலில் வேதாளம்
கட்டியது ஒரு தன்னந்தனி சிறைச்சாலை
நெட்டை என்றும் குட்டை என்றும்
பத்துவித
அறைகளிலே அகப்பட்ட பாவி
பாசங்களால் கட்டுண்ட இவ் உடலை
பருந்து கூட இரையாக்குமா அறிகிலேன்
ஏங்குகின்றான் நிதமும் அதை வளர்க்க
ஏன் இவன் இப்படிப் பிறந்தான்
இன்றுவரை அவனே அறிவானோ!
வார்த்தையில் அன்பு சொட்டும்
வஞ்சனை நெஞ்சில் முட்டும்
இத்தனைக்கும் ஊரில் நல்லவனாய்
இவன்தான் இருந்திருப்பான்
மனிதரில் பல் மதங்கண்டான்
மனதளவில் அதை தரம் பிரித்தான்
கையினில் ஒரு வாழ் கொண்டான்
கயவரை அழிக்கவெனப் புறப்பட்டான்
கேட்டால் அவன் இவனைக் கயவனென்றான்
இறுதியில் இருவருமே மரணம் கண்டான்

எழுதுவது
என்றென்றும் அன்புடன்
இதயநிலா.....
|