|
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?
சாத்தான்
என்ற ஒருவன் இல்லவே இல்லை என்கிறார்கள் நவீன கல்விமான்கள் சிலர்.
அதெல்லாம் வெறும் மனித கற்பனையே எனச் சொல்கிறார்கள். இந்தக் கருத்து
ஒன்றும் புதிதல்ல. "தான் இல்லை என நம்ப வைப்பதே பிசாசின் படு மோசமான
சூழ்ச்சி" என்று எழுதினார் 19-ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ஷார்ல் பையர்
போட்லாயர். சாத்தான் நிஜமான ஆளா? அப்படியென்றால் அவன்
எப்படித்தோன்றினான்? உலகத்தை உலுக்கி எடுக்கும் பிரச்சினைகளுக்குப்
பின்னால் மறைந்திருப்பது அவன் தானா? அவனுடைய தீய செல்வாக்குகளில்
இருந்து நீங்கள் எவ்வாறு தப்பிக்கலாம்?
பைபிள் என்ன சொல்கிறது?
சாத்தான் என்பவன் நிஜமான ஒரு ஆளாகவே பைபிள் சொல்கின்றது;
அவன் காணக்கூடாத ஆவிமண்டலத்தில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது.
அவனுடைய பொல்லாத மூர்க்கமான குணங்களைப்பற்றியும் அவனுடைய கெட்ட
செயல்களைப்பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. அவன் எப்படி மிக மோசமான
ஜீவராசியாக மாறினான்? கடவுள் மனிதனைப்படைப்பதற்கு வெகு காலத்திற்கு
முன்பே சர்வசிருஷ்டிக்கும் 'முந்தின பேறான்' தம் மகனைப் படைத்தார்.
அவரே பிறகு இயேசு என அழைக்கப்பட்டார்.
அதன் பிறகு தேவ தூதர்கள் எனப்படும் 'தேவ புத்திரர்களைப்' படைத்தார்.
அவர்கள் அனைவரும் பரிபூரணர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்தனர். ஆனால்
அவர்களில் ஒரு தூதன் சாத்தானாக மாறிவிட்டான். என்கிறது பைபிள். அந்தத்
தூதன் படைக்கப்பட்ட போது சாத்தான் என அழைக்கப்படவில்லை அது அவனுக்குக்
கிடைத்த பட்டப்பெயராகும். மூல கிரேக்க மொழியின்படி அதன் அர்த்தம்
"எதிரி; பகைவன்;குற்றம்சாட்டுபவன்" என்பதாகும். அந்தத் தூதன்
கடவுளுக்கு எதிராக செயற்பட்டதால் சாத்தான் என
தொடர்ந்து...

எழுதுவது இதயநிலா.....
|