|
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?
தொடர்ச்சி...
அழைக்கப்பட்டான். அந்த ஆவி
சிருஷ்டி கடவுள் மீது பகைமையும் பொறாமையும் வளர்த்துக்கொண்டான்.
மற்றவர்கள் தன்னை வணங்க வேண்டுமென விரும்பினான் சாத்தானுக்குக்
கீழ்ப்படிவதன் மூலம் ஏவாள் அவனை கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்தான்.
கலகத்தை கிளப்பி
விட்டதன் மூலம் நல்லவனாக இருந்த தூதன் தன்னை சாத்தானாக மாற்றிக்கொண்டான்.
கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் சரி அவன் எதிரியாக இருக்கின்றான். இந்தக்
கெட்ட தூதனுக்கு "பிசாசு" என்ற பட்டப்பெயரும் உண்டு. ஒரு குற்றவாளி
குற்றம் செய்கின்ற போது தன்னை யாரும் கண்டு கொள்ள முடியாத வாறு
தயார்செய்து கொண்ட பின்பே குற்றத்தைச் செய்கின்றான்.
ஆகவே அக்குற்றத்தைப் புரிந்தவர் யார் என்பதை போலீஸ்காரர் கண்டுகொள்ள
முடியவில்லை என்றாலும் ஒரு குற்றம் செய்யப்பட்டிருக்கின்றமை தெரிகின்றது.
அவ்வாறுதான் பிசாசு ஆகிய சாத்தான் செய்கின்ற குற்றங்கள் அனைத்துமே அவன்
என்று அடையாளம் தெரியாமல் செய்யப்படுகினறன. "நாம் வாழ்கின்ற இவ்வுலகின்
சீர்கேட்டிற்குக் காரணம் குற்றம் செய்வதில் கூர்மதி பெற்ற சாத்தானே" என
இயேசு கூறுகின்றார். சாத்தான் தனக்குக் கீழ்ப்படிகிறவர்களைக்கொண்டு
இவ்வுலகில் கொலைகள்; கொள்ளைகள்; போர்கள்; இம்சைகள்; பேராசைகள்; ஊளல்கள்
என அனைத்துக் குற்றச்செயல்களையும் மிக இலகுவாகச் செய்து விடுகின்றான்.
"தெளிந்த புத்தி உள்ளவர்களாயயிருங்கள்; விழித்திருங்கள்; என்று பைபிள்
எச்சரிக்கின்றது. " உங்கள் எதிராளியான பிசாசனவன் எவனை விழுங்கலாம் என்று
வகைதேடிச் சுற்றித்திரிகின்றான்" என்கிறது பைபிள். "புத்தியில்லாதவர்களே
அதாவது விழிப்புடன் இராதவர்களே சாத்தானால் வெகுவாகப் பாதிப்படைகின்றனர்
" என்கிறது பைபிள். ஆகவே சாத்தான் என்பவன் நிஜமானவன் என்பதையும் அவன்
தேடும் மனிதர்களாக நாம் இருப்பதில் இருந்து விலகி இருந்து கொள்ள
வேண்டும் என்பதையும் என்றும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
எழுதுவது என்றென்றும் அன்புடன் இதயநிலா.....

முற்றும்... |