|
மண்ணில் புரியாமல் உதிக்கிறது....
சொச்சத்தில் முடிந்தது
இவ்வாழ்வு
மிச்சத்தை மீண்டும் ஒருமுறை
அச்சச்சோ வேண்டாமென்கிறது உளம்
உச்சத்தில் ஓருரிவர் உரசல்களில்
சஞ்சரித்தது இவ்வுயிர்கள்

நிசப்தமற்ற இச் சொர்க்கத்தில்
நின்மதிதேடி ஓர் பயணம்
உருக்குலைந்த சொந்தங்கள்-இன்று
உருக்குலைந்த உடலங்களாய்
வருந்திய ஜீவன்களை மீண்டும்
வரவளைத்து ஒரு அந்தரங்கம்
சொர்க்கத்தில் இது முதல் அரங்கம்
மறுவாழ்வு மறுபிறவி எனும் பெயரில்
இரு இறைவா இன்னுமோர் சோதனையா
மறுக்கிறது ஜீவன்கள்
நகைக்கிறது இறையுள்ளம்
நரனே இது நம்பிக்கை வலயத்தில்சிறிது
சிந்தனை முடிவுறுகிறது
ஒர் புது ஜீவன் இம் மண்ணில்
புரியாமல் உதிக்கிறது.

எழுதுவது
என்றென்றும் அன்புடன் இதயநிலா..... |