|
கற்பனையின் எல்லைகள்...
உணர்வுகளின் உச்சங்களில் மீண்டும்;
உறைவிடம் தேடும் நினைவுகளை
மனதின் ஓரங்களில் மட்டும்
மறைத்துக்கொள்ளும் இதயங்கள்.

வலிமையின் தடங்களில் இருந்தும்
வலுப்பெற முயலும் வார்த்தைகளை
கண்களின் வழியே சுமந்து செல்லும்
கண்ணிமையின் அதிர்வுகள்.
உள்ளத்தில் மலரத்துடிக்கும்
உன்னத நினைவுகள்
அத்தனைக்கும் அந்தமாகும்
எம் கற்பனையின் எல்லைகள்.

எழுதுவது
என்றென்றும் அன்புடன்
இதயநிலா.....
|