|
நேர்மையின் செல்வன்
:::.
இந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம் என்பது
அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் !
கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக
இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார்
பேசிக்கொண்டனர் இப்படியே சந்திராவளிக்கு வயது முப்பது ஆனது அவள் தன்
கடும் தவத்தினை கலைத்தக்கொள்ளவே இல்லை. கிரஷ்ணனைத்தவிர வேறு நினைவின்றி
அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் பலித்தது
அவள்முன் சிவபெருமான் தோன்றினார்
"
சந்திராவளி உன் கடும் தவம் கண்டு மெச்சினோம். உனக்குவேண்டிய
வரத்தைக்கேட்டக்கொள்" என்றார். "ஐயனே எனது தவம் கிருஷ்ணனைக் குறித்தே
அவரைக் கணவனான அடையவே இப்படித்தவம் இயற்றுகிறேன்" என்றாள் சந்திராவளி.
"பெண்னே அது நடக்காது ஏனெனில் கிருஷ்ணன் புத்தனாக அவதரித்து
மௌனியாகிவிட்டார். ருக்மினி வேறு அவரை இணைபிரியாது இருக்கிறாள். அகவே
நீ என்னைத்திருமணம் செய்து கொள் !" என்றார் சிவன். "ஐயா இது என்ன
அநியாயம் நான் கிருஷ்ணனையே கணவனாக வரிந்து கொண்டுவிட்டேன். பிறர்
மனைவியை இச்சிப்பது முறையா? அத்திரி முணிவரின் மனைவி அனுசூயாவின் கற்பை
சோதித்துப் பட்டது போதாதா? என்னிலும் வேறு உங்கள் சோதனையா?" என்று தான்
கிருஷ்ணன் மீது கொண்ட அன்பின் வண்மையை நிறுத்தி நின்றாள்.
திடீரென சிவன் உருவத்தில் நின்ற கிருஷ்ணர் கிருஷ்ணராகக்
காட்சிகொடுத்தார்." சந்திராவளியே உன் கற்பின் சிறப்பை அறியவே
அவ்வுருவில் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். இந்தச்சமையத்தில் அங்கு
ருக்மினி தோன்றினாள். நடந்ததையும் நடக்க இருப்பதையும் உணர்ந்துகொண்ட
அவள் கிருஷ்ணன் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். உடனேயே அவ்விடத்தைவிட்டு
அகன்றோடினாள். கோபமிகுதியால் அகன்ற ருக்மினிதேவியைத்தேடி
கிருஷ்ணபரமாத்மா புறப்பட்டார். இவ்வாறு தேடிக்கொண்டே சந்திரபாகா
நதிக்கரையை அடைந்தார் கிருஷ்ணர். அங்கே ; தனது தாய்தந்தையருக்குச் சேவை
செய்துகொண்டிருந்த
பிராமணன் ஒருவனைக் கண்டார். அவனிடம்
சென்று அன்பனே நீ உன் தாய்தந்தையர் மீது கொண்டுள்ள அன்பினை மெச்சினேன்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார். உடனே அப்பிராமணன்
" தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்றான். இதற்கு" நானே
கிருஷ்ணபரமாத்மா?" என்ற பதில் கிடைத்தது. உடனே அவரை வணங்கியவனாய் இறைவனே
என் தாய்தந்தையர் நீராடிமடித்துவிட்டனர் அவர்களை வீட்டில் விட்டு
அவர்கழுக்கு வேண்டிய பணிவிடைசெய்துவிட்டு வருகிறேன் அதுவரை தாங்கள்
இவ்விடத்தில் காத்திருக்க வேண்டுகிறேன்" என்றான்.
கருணையே வடிவமான கிருஷ்ணபரமாத்மாவும்" சரி சென்றுவா நீ வரும்வரை
இவ்விடத்திலேயே காத்திருப்பேன்" என்று வாக்குக்கொடுத்து அனுப்பிவைத்தார்.
தனது பெற்றோரை வீட்டிற்கு அழைத்துச்சென்ற பிராமணன் அவர்களுக்கு வேண்டிய
பணிவிடைகளைச் செய்து முடித்த பின்பு " அன்னையே எனக்கு வரம்
நல்குவதற்காக கிருஷ்ணபரமார்த்மா சந்திரபாகா நதிக்கரையில்
காத்திருக்கிறார். நான் சென்றுவரம் பெற்று வரட்டுமா?" என்றான். அதற்கு
இத்தாய்" மகனே நீ மட்டும் அவரை வணங்கினால் போதுமா எல்லோரும் அவரை
தரிசிக்கும் படியான ஒரு வரத்தைக் கேள்..." என்று கூறி அனுப்பிவைத்தாள்.
வரும் வளியிலேயே தன்நடை தளர அப்பிராமணன் கிருஷ்ணனை நோக்கி தன் கரங்களை
கூப்பியவாறே சமாதியடைந்தான். இதையறியாத கிருஷ்ணர் தன் பக்தனுக்காயும்
தான் கொடுத்த வாக்குறுதிக்காயும் அவ்விடத்தில் பலநாட்கள்
காத்திருந்தார்.இன்றும் இவ்வூரில் அவர் காத்திருந்த இடத்தில் அவருடைய
சிலை உள்ளதைக் காணலாம்.
தன் அடியார்கள் மீது இறைவன் அளவுகடந்த அன்பினைப் பகிர்ந்து கொள்பவன்.
என்றும் எம் கடமையினைச் சிறப்பிக்க அவனுடைய பிரசன்னம் எம் எல்லோர்
வாழ்விலும் ஒருநாள் நிச்சையம் கைகூடவே உள்ளது. உங்கள் கடமைகளை இனிதே
செய்யுங்கள் இறைவன் உங்களைத்தேடியே வருவான்...
எழுதுவது
என்றென்றும் அன்புடன் இதயநிலா.....
|