|
மீண்டும் ஒரு வசந்த காலம்...
விடிவெள்ளி அடிவானில் உதயமாகும் தருணம்
இடிகொண்ட நெஞ்சம் இது அலைகளுடன் வருடும்
அடிவானம் சொல்லும் அச்செய்தி மட்டும் போதும்
இனி கரைவந்து
சேரும் நம்பிக்கை பிறக்கும்
உறுதியற்றுப்போன கட்டுமரங்களின் மேலிருக்கும்
எங்கள் உறுதி மட்டும் மிச்சமிருக்கும்
வானில்
கருக்கொள்ளும் மேகங்கள் எங்கள்
நெஞ்சில் கொண்டுவரும் சிறு அச்சங்கள்
ச ொல்லில்
ஒலி பிறக்கும் அந்த
சொந்தங்களை
காண மனம் துடிக்கும்
வியத்தகு நம் வாழ்ககை முடிந்திடுமோ எனும்
பீதி ஒன்று நமை விடாது ஆட்கொள்ளும்
இனி செய்வது
எதுவென கைகள் துடிக்கும்
கணப்பொழுதில் கரைபடும் எம் கண்ணில்
உயிர்
உறவுகளை தேடி விரைந்திடும்
உடல் மட்டும் கொட்டென நின்றிடும்
இந்த இன்பக் கனவுகள் மட்டுமே
இப்போ கூட
இருக்கும் எம்முடன்
மீண்டும் ஒரு வசந்த காலம் வருமா
மீழும் எம்
நினைவுகள் நெஜமென
மாறும் நிலைதனை உணர...
எழுதுவது
என்றென்றும் அன்புடன் இதயநிலா.....
 |