|
மறந்தும் வேண்டாம் இறையே...
கண ்கள்
அயர்ந்தும் அயராத எம் நினைவுகள்
மண்ணில் நிதமும் வரும் நிகள்வுகள்
சொல்லில் அகப்படாத துயரங்கள்
செல்லரித்துப்போன நம் கனவுகள்
நிஜத்தை விஞ்சிடும் ஆசைகள்
பயத்தில் பகற்கனவாகிய மறுக்கள்
சுயம்
இழந்து துடிக்கும் அவலங்கள்
விண்ணொடு முட்டும் வினாக்கள்
விடைகாண இயலாத காலங்கள்
காதினில் ஒலிக்கும் இடியோசை
நெருங்கும் அபாயத்தின் மணியோசை
ஒரு மழலையின் குரலோசை
மறு
பிறவியினை நான் உணரும்
ஒரு இனிய சந்தர்ப்பம்
இறைவனிடம் இது இறுதிவிண்ணப்பம்
இனியும்
இம்மானிடப்பிறவி-வேண்டாம்
இவ்வளவே போதும் இவ்வுலகில்
மறுபிறவி விலங்கெனினும்
மறுக்கெட்ட
இம்மண்ணில்
மறந்தும் வேண்டாம் இறையே...
எழுதுவது
என்றென்றும் அன்புடன்
இதயநிலா.....
 |